பரமக்குடி, மார்ச் 9 –
அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் பரமக்குடி நாடார் தலைமை சங்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில துணைத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் சந்தன மரியான் மேற்கு மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி பிரிவு மாவட்ட தலைவர் கஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சிவ.செல்வராஜ் ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
வரும் ஏப்ரல் 15 ந் தேதி பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் கிராமத்தில் நடைபெறும் அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்றும் அதில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைத்து சமுதாய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மாநில பொதுக்குழு எடுக்கும் முடிவின்படி தேர்தல் பணியாற்றுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மகளிர் அணி தலைவி முனீஸ்வரி, நயினார் கோவில் ஒன்றிய தலைவர் காமராஜ், வர்த்தக பிரிவு மாவட்ட பொருளாளர் அந்தோணி ராஜ், தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாகேந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.



