திருப்பூர், செப். 23 –
மாவட்ட ஆட்சித் தலைவர் மனிஷ் நாரணவரே திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி-2025 சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே தெரிவித்ததாவது: கோ-ஆப்டெக்ஸ்
கடந்த 90 தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான வருடங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு நல்கி அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனம் பாரம்பரியமிக்க பட்டு இரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை, தஞ்சை முதலிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுசேலைகளை வாடிக்கையாளர்கள் பெறும் வரவேற்பை பெற்றுத் திகழ்கின்றன. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்பான மென்பட்டு சேலைகளையும் கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகிறது. தீபாவளி-2025 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி இரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30% அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்டபட்டு மற்றும் பருத்தி சேலைகள், இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு இரகங்கள், திரைச்சீலைகள், ரெடிமேட் சட்டைகள், சுடிதார் இரகங்கள், குர்தீஸ் வகைகள் பலதரப்பட்ட நவீன் பைகள், குல்ட் இரகங்கள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம்பர்னிசிங் இரகங்கள் என ஏரளமாக தருவிக்கப்பட்டுள்ளன.



