By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவில் தெப்பகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்; பக்தர்கள் வேதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோவில் தெப்பகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்; பக்தர்கள் வேதனை
கனஂனியாகுமரி

கோவில் தெப்பகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்; பக்தர்கள் வேதனை

Last updated: July 16, 2025 7:04 pm
July 16, 2025
26 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஜுலை 16 –

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள தெப்பகுளத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கால்களை நனைத்து விட்டு வருவது ஒரு ஐதீகமாக கருதி அதன் படி நடந்து வந்தார்கள். மேலும் இந்த தெப்பகுளத்தில் தை மாதத்தில் வரும் தேர் திருவிழா காலத்தில் தெப்ப தேர் நிகழ்ச்சிகள் வெகு விமர்சனமாக நடந்து வந்தது. இந்த தெப்ப குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு வேண்டி தேவசம்போர்டும் பொதுப்பணித் துறையும் இணைந்து அனந்தநார் சானலிருந்து தண்ணீர் புலிவீரன் குளத்திற்கு வந்து தனி கால்வாய் வழியாக கோவில் தெப்பகுளத்தில் நீர் நிரப்பி வந்தார்கள். அந்த குளத்தில் நீர் வெளியேற இரண்டு மடைகளும் வைத்துள்ளார்கள். அதிக அளவு நீர் மழை காலங்களில் வந்தால் மேல்மடை வழியாக அரசியர் கால்வாயிலும் அடி மடை வழியாக தெப்பகுளத்தை தூர் செய்யும்போதும் அந்த கழிவு நீர் பழையாற்றிலும் செல்வது போல் அமைத்து இருந்தார்கள். ஒவ்வொரு வருடமும் நடக்கும் தேர் திருவிழாவிற்கு முன்பு இந்த தெப்பகுளத்தை தூர் வாரி சுத்தம் செய்வதை பக்தர்களும் அற நிலைய துறையினரும் செய்து வந்தனர்.

தற்போது சுமார் 30 வருடங்களாக இந்த தெப்பகுளம் தூர் வாரப்படாமல் மகுளிகளும் குப்பைகளுமாக தெப்பகுளத்தினுடைய தனித்தன்மையை இழந்து காணப்படுகிறது. இது குறித்து கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் கேட்கும் போது குளத்திலிருந்து கழிவு நீர் வெளிவரும் அடி மடையானது முழுவதுமாக மூடி நீர் வெளியேற முடியாமல் உள்ளது. தெப்பகுளம் தூர் வாரபடாததற்கு இதுவே முழு காரணம். இதை அறநிலைய துறை அதிகாரிகளின் பார்வைக்கு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அவர்கள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பல நாட்களாக கழிகளின் பிடியில் சிக்கியுள்ள தெப்பகுளத்தில் ஏதோ விஷத்தன்மை உருவாகி இந்த குளத்தில் உள்ள மீன்கள் எல்லாம் செத்து மிதக்கின்றது. இதனால் கோவில் வளாகத்தை சுற்றிலும் துர்நாற்றமடிக்கிறது. இனியாவது அதிகாரிகள் முன் வந்து தெப்பகுளத்தின் அடி மடையை சரி செய்து தெப்பகுளத்தின் புனித தன்மையை காக்க வேண்டும் என வேதனையுடன் கூறினர். இந்நிலையில் பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேரூராட்சி ஊழியர்கள் கொண்டு முதல் கட்டமாக செத்து மிதக்கும் மீன்களை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பிள்ளைகளை தாக்கிய மத போதகர் சிறையில் அடைப்பு
இடி மின்னலுடன் 3 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை
அஞ்சுகிராமம் பிரகாஷ் நகரில் சாலை பணி துவக்கம்; கவுன்சிலர் ஜோஸ் திவாகர் தொடங்கி வைத்தார்
குமரி மாவட்ட அளவில் பஜனை போட்டி; பௌர்ணமி பஜன்ஸ் சங்கத்திற்கு முதல் பரிசு
மாணவ, மாணவிகளின் மேற்படிப்பிற்கு ஆசிரியர்கள் உந்துதலாக இருக்க வேண்டும்; கலெக்டர் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

தமிழ்நாட்டின் உரிமையை மீட்க ஓரணியில் தமிழ்நாடு திட்டம் – அமைச்சர் முத்துசாமி பேட்டி

July 3, 2025
25 Views
உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம்
திருவெண்ணெய்நல்லூரில் விசிக சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாளில்
நகராட்சியுடன் இணைப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account