களியக்காவிளை, செப். 1 –
குமரி மாவட்ட அளவில் நடந்த பஜனை போட்டியில் இட்டியாரக் குளம் பௌர்ணமி பஜன்ஸ் சங்கத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. மாவட்ட அளவிலான பஜனை போட்டிகள் பூக்கடை மங்கள விநாயகர் கோயிலில் நடந்தது. விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு நடந்த இந்த பஜனை போட்டியில் கிளாத்தூர் நாகஜராஜ கோயில், பூக்கடை கோயில், திக்கணங்கோடு சாஸ்தா கோயில், இட்டியாரக் குளம் பௌர்ணமி பஜன்ஸ், பாலப்பள்ளம் கோயில், மங்கள விநாயகர் கோயில் உள்ளிட்ட 21 – கோயில்களில் இருந்து 21 – பஜனை சங்கத்தினர் போட்டியில் பங்கேற்றனர். இந்த பஜனை போட்டியில் இட்டியாரக்குளம் பெளர்ணமி பஜன்ஸ் சங்கத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. வெற்றி பெற்று சாதனை படைத்த பஜனை சங்கத்தினர கோயில் நிர்வாகிகள் பாராட்டினர்.



