திருவெண்ணெய்நல்லூர், செப். 27 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் விசிக சார்பில் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீர.விடுதலைச்செல்வன் தலைமை தாங்கினார். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 100 நாள் வேலை திட்டத்தில் தற்போது வழங்கப்படுகின்ற வேலை நாட்களை குறைத்தது, ஜல் ஜீவன் திட்டத்தை நிறுத்தியது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆளும் பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் விசிக நிர்வாகிகள் பெரியார், சேர்ந்தநாடு அறிவுக்கரசு, இளங்கோவன், ரமேஷ், அறிந்தவன், வடிவேலன், நாகேஸ்வரராவ் முருகேசன், முருகன், வழக்கறிஞர் மனோகரன், காசி சண்முகம், தயாளன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், ஏராளமான மகளிர் அணியினர் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக வீரன் நன்றி கூறினார்.



