கன்னியாகுமரி, நவ. 12 –
கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் திருமால் முருகன் (27) கொத்தனார். இவரது மனைவி பவுத்திரா (24) கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். திருமால் முருகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு திருமால் முருகன் போதையில் வீட்டுக்கு வந்து இருந்ததால் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதை அடுத்து இரவு 9:30 மணியில் தனது பிள்ளைகளை கொண்டு பவித்ரா குமுளியில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்தவர்கள் திருமால் முருகனை கண்டித்தனர். இதை அடுத்து வீட்டில் அறைக்கு சென்ற அவர் பின்னர் கதவு திறக்கவில்லை.
உறவினர்கள் கதவு உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது திருமால் முருகன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் திருமால் முருகன் உயிரிழந்தது தெரிய வந்தது. கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


