சங்கரன்கோவில், அக்டோபர் 04 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா களப்பாகுளத்தில் இருந்து உடப்பன்குளம் செல்லும் இணைப்பு சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாசக்தி வாராகி அம்மன் கோயிலில் நவராத்திரி திருநாளை முன்னிட்டு நேற்று காலை யாக சாலை பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து வாராகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. பூஜைகளை கடையநல்லூர் ஶ்ரீ துர்க்கா ப்ரத்யங்கிரா தேவி உபாசகர் சக்தி கணேஷ் மற்றும் அவரது குழுவினர் செய்த இருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், பாஜக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, பாஜக நகரத் தலைவர் யூ பிவி, உதயகுமார், அனுசுயா மாரிமுத்து, சிஎஸ்எம்எஸ் சங்கரசுப்ரமணியன், விழா கமிட்டியாளர்கள் வாராகி அம்மன் கோயில் தலைமை பூசாரி சக்திவேல், பரமகணேசன், முருகன், கணேசன், பரமசிவன், குணசேகரன், தேன்மொழி, செந்தாமரை, சக்திவேல், மாணிக்கம், பலவேசம், அங்கப்பன், மாணிக்கம், வெங்கடேஷ், மகாலிங்கம் , சந்தனபாண்டியன், சுப்பிரமணியன் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகவேல், திமுக மாணவரணி வெங்கடேஷ் மற்றும் செந்தில் ஆண்டவர் பாதயாத்திரை குழுவினர் உள்ளிட்ட திரளான பக்தர்கள்
கலந்து கொண்டனர்.



