கிருஷ்ணகிரி, மே 26 –
தமிழக முதல்வரக C.ஜோசப் விஜய் பதவி ஏற்றுள்ளதை கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தவெக ஒன்றிய கழகத்தின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. காவேரிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் துவங்கிய இத்த கிரிக்கெட் போட்டியில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், போத்தாபுரம், தளிஹள்ளி, நரிமேடு, பையூர், ஜெகதாப், ஹாள்வேஹாள்ளி, திம்மாபுரம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
நாக் அவுட் முறையில் நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற கிரிக்கெட் டீம் அணியும் 11 எப், சி, சி அணியும் விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டி முடிவில் கிரிக்கெட் டீம் வெற்றி பெற்றது. பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தவெக சட்ட மன்ற உறுப்பினர் முருந்தன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவருமான எல். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்த கிரிக்கெட் டீம் அணிக்கும், இரண்டாம் இடம் 11 எப், சி, சி, அணிக்கும் மூன்றாம் இடம் ஆர்.சி.பி. அணிக்கும் ரொக்க பரிசுகள் மற்றும் சுழல் கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டினார்கள்.
மேலும் இந்த பரிசளிப்பு விழாவின்போது காவேரிப்பட்டினம் தவெக ஒன்றிய செயலாளர் விஜய் குமார், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் பார்த்திபன், கிருஷ்ணகிரி நகர சசிகுமார், திம்மபுரம் ஊராட்சி செயலாளர் விஜய், துணை ஊராட்சி செயலாளர் சக்திவேல், காவேரிப்பட்டணம் பேருராட்சி செயலாளர் கோகுல், ஒன்றிய துணை செயலாளர் உதயகுமார், ஒன்றிய இணைச் செயலாளர் பச்சையப்பா, நகர இளைஞர் அணி செயலாளர் அப்துல் ரஷீக்,
நகர செயற்குழு உறுப்பினர் அருண்குமார் கே.வி.எஸ். சாந்தகுமார், உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



