தென்காசி, நவ. 22 –
பாஜக மாநில தலைவர் நயினார் நாஜேந்திரன் நடத்திவரும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பிரச்சார பயணத்திற்கு தென்காசி மாவட்ட அதிமுக செயலாளர் செ. கிருஷ்ண முரளி எம்எல்ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். செல்வம் மோகன்தாஸ் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கைத்தறி ஆடைகள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் நேற்று புளியங்குடி பள்ளிவாசல் முன்பாக உரையாற்றினார் அதில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக என்று குற்றம் சாட்டினார் தென்காசியில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கொண்டு வருவோம், செண்பகவல்லி அணையை சீர் செய்வோம், பம்பா நதி முதல் அச்சன்கோவில் வரை ஆயிரம் தடுப்பணைகள் கட்டித் தருவோம், அதற்கு பதிலாக தமிழ்நாட்டில் உள்ள கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் திமுக அரசுகேரளாவிற்கு மணல், எம்சாண்ட் கேரளாவிற்கு ஏமாத்தி லாரிகளில் எடுத்து செல்கின்றனர் கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டி நோயை பரப்புகின்றனர்.
கரூரில்41 பேர் நசுங்கி செத்தனர் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் ஸ்டாலின் ஆட்சி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஆளுநர் நினைத்தால் அரசுகோப்புகளை நிறைவேற்றலாம் தடுத்து நிறுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் கட்டளையிட்டது.
திமுக மீது தமிழ்நாடு மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள் நாலரை ஆண்டு ஆட்சி காலத்தில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரி கூட தமிழ்நாட்டுக்கு வரவில்லை அதிமுக ஆட்சி காலத்தில் 11 மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது, புளியங்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வருவோம் என்று கூறினார்கள். பசுமை வேளாண் திட்டத்தின் மூலம் கோவையில் 18000 கோடியில் நலத்திட்ட உதவிகள், புளியங்குடி எலுமிச்சை புவிசார் குறியீடு அறிவித்தது மோடி அரசு ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா இதற்கு மோடி அரசு புவிசார் குறியீடு அறிவித்தது மோடி அரசு, ரேஷன் கடைகளில் இலவச அரிசி, விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000ம், காலை உணவு திட்டம் எல்லாம் பாஜக அளித்த நிதி உதவித்திட்டம் அதை நாங்கள் தான் செய்தோம் என்று ஸ்டாலின் அரசு மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஒருங்கிணைந்த தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் என் டி ஏ கூட்டணி வெல்லும்.
தென்காசி மாவட்டத்தில் பெண்களுக்கான 1.50 லட்சம் கழிப்பறைகள், 7000 கோடியில் தென்காசி ரயில்வே ஸ்டேஷன் நவீன மயமாக்கல், 350 கோடியில் பன்னாட்டு விமான நிலைய தூத்துக்குடியில், 54,000 விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் வழங்கியது பிஜேபி அரசு 1400 கோடி திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அமைத்துக் கொடுத்தது மத்திய அரசு அதனால் அன்பை பிஜேபி மீது காட்டுகிறார்கள் இன்று பீகார் நாளை தமிழகம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி , கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ண முரளி குட்டியப்பா தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் செல்வம் மோகன்தாஸ் பாண்டியன் முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.அய்யாதுரை, பாரத ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் ராம்ராஜ், ஜான் பாண்டியன் கட்சி நிர்வாகிகள், அதிமுக நகர செயலாளர் சங்கர பாண்டியன், மாநில விவசாய அணி எட்வின், நகரத் தலைவர் ஆர்த்தி, நீராத்து லிங்கம், மற்றும் பாஜக அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



