தென் தமிழகத்தில் உலகப்புகழ் பெற்ற சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் கொடியேற்றத்துடன் துவங்கியது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார் அக்டோபர் 28 திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது திருக்கோவில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடைபெற்றது கொடி பட்டம் வீதி உலா நடந்தது கோமதி அம்மன் சிலிகையில் எழுந்தருளினார் அம்மன் சன்னதி தங்கக்கொடி மரத்தில் காலை 6 45 மணிக்கு கொடியேற்றப்பட்டு சங்கர் பட்டர் தலைமையில் பட்டர்கள் பூஜைகளை செய்தனர் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் அக்டோபர் 28ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் 12 45 மணிக்கு கீழ ரத வீதி தவசு மண்டபத்தில் கோமதி அம்பாள் எழுந்தருதல் நிகழ்ச்சி தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் பிரியாவிடை சமேத சங்கரலிங்க சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கீழரத வீதி சுவாமி தேர் அருகே கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் சுவாமி அம்பாள் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து இரவு கோவிலில் அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது அதனைத் தொடர்ந்து அக்டோபர் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 12ம் திருநாள் அன்று பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது கொடியேற்ற நிகழ்ச்சியில் ராஜா எம்எல்ஏ மற்றும் கோவில் ஊழியர்கள்மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



