நாகர்கோவில், ஜூன் 28 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார் டியா பவுண்டேஷன் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் 28ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
வேலைவாய்ப்பு முகாமில் சென்னையைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் பட்டப் படிப்பு, டிப்ளமோ, முடித்தவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாமின் முன்பதிவு இணைய வாயிலாக https:// bit.ly/NCRJ2025 என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். குமரி மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.