பல்லாவரம், அக். 9 –
பல்லாவரம் பெரிய ஏரியில் ஆகாயாத் தாமரை அகற்றல் மற்றும் மீட்டெடுப்பு பணிகளைத் தொடங்கும் விழா 200 அடி ரேடியல் சாலையில் கோனே இந்தியா, எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் மற்றும் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை ஆகியவற்றின் இணைந்து செயல்படும் பணி ஆகும். இந்த பணி துவக்க விழாவில் எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷனின் தலைவர் எஸ். செந்தூர் பாரி் கூட்டத்தில் வரவேற்பு ஆற்றினார். அப்போது வெள்ள சவால்களைத் தீர்க்க நிலைத்தன்மையான தீர்வுகளை செயல்படுத்துவதில் கோன் இந்தியா, நீர்வளத்துறை மற்றும் எக்ஸ்நோராவின் இணைந்த உறுதிப்பாட்டைப் பாராட்டினார்.
இத்தகைய கூட்டுறவுகள் நகரின் நீர்வளங்களைப் பாதுகாப்பதற்கும், சரியான நேரத்தில் தலையீடுகள் மூலம் பேரழிவுகளைத் தடுப்பதற்கும் முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தினார். கோனே இந்தியாவின் மூத்த மேலாளர் ஜி. தியாகராஜன் அவர்கள் பேசுகையில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைகான கோனேயின் ஒத்துழைப்பை மீண்டும் உறுதி படுத்தி பேசினார். இது நீண்டகால சமூக தாக்கத்தை உருவாக்கும் அர்த்தமுள்ள சிஎஸ்ஆர் முயற்சிகள் மூலம் நடைபெறுகிறது என்று கூறினார்.
இந்த விழாவில் நீர்வளத்துறையின் அதிகாரிகள் பொறியாளர்-இன்-சீஃப் எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் சிஇ (ஜிஎல்); எம். மகேஷ் நாகராஜன், சூப்பரிண்டெண்டிங் இன்ஜினியர், பாலார் பேசின் சர்க்கிள் மற்றும் ஆர். அருண் மொழி, எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர், லோயர் பாலார் பேசின் டிவிஷன் ஆகியோர் இணைந்து எக்ஸ்கவேட்டரை கொடியசைத்து பணியை துவக்கி வைத்தனர். இதன் மூலம் பெரிய ஏரியில் ஆகாயத் தாமரை அகற்றல் மற்றும் மீட்டெடுப்பு பணிகளைத் தொடங்கப்பட்டன.
இந்தத் திட்டம் நீரோட்டத்தை மேம்படுத்துதல், நிலத்தடி நீர் அதிகரித்தல் மற்றும் மழைக்காலத்திற்கு முன்பு சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ள ஆபத்துகளை கணிசமாகக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்னோராவின் பொருளாளர் சுப்பிரமணி, தாம்பரம் மாநகராட்சி ஒருங்கிணைப்பாளர் வி. சீதாராமன், நன்மங்கலம் ஏறி மீட்பு குழு தலைவர் ஜெயப்பிரியா, பொருளாளர் சிவசங்கரி நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



