கிருஷ்ணகிரி, அக். 10 –
ஊத்தங்கரை வட்டத்திற்குட்பட்ட காரப்பட்டு அடுத்த அருனபதியில் தெருக்களை ஆக்கரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு மனு அளித்தேன் பேரில் அதிகாரிகள் ஆக்கரமிப்பினை அகற்ற ஆய்வு மேற்கொண்டனர். அருனபதி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அப்பகுதியில் அந்த கிராமத்தினை ஒட்டி பாம்பாறு அணையில் சென்றடையும் ஆறு செல்கிறது. நாபர்டு திட்டத்தின் கீழ் பாலம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அருனபதி சாலை வழியாக பல கிராமங்களுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் செல்லும் வாகனங்கள் ஆக்கரமிப்பு செய்யப்பட்ட சாலையில் சென்று வர சிரமமாக உள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையக்காகவும், விவசாயம் சார்ந்த பொருட்களை ஏற்றிச் செல்லவும் பெரும் சிரமமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறி வந்தனர். தனி நபர்களின் ஆக்கரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கொடுத்த மனு அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர், துணை வட்டாட்சியர் என சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அப்பகுதியினை ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்பை அகற்றி, முறையாக அளந்து நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதிபடுத்தி சென்றனர். இச்சம்பவமானது காவல் துறையினரின் பாதுகாப்புடன் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செய்துள்ளதாக பொதுமக்கள் அளித்த மனு அளித்ததின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்



