கிருஷ்ணகிரி, ஜூலை 7 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடியே 50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தரக்கட்டுப்பாடு / பகுப்பாய்வு ஆய்வகம், கெலமங்கல வட்டாரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் மற்றும் தளி வட்டார தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் ரூ.3 கோடியே 37 இலட்சத்து 14 ஆயிரத்து 401 மதிப்பில் புதிய மாணவர் விடுதி ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி தோட்டக்கலை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் புதியதாக கட்டப்படுள்ள தரக்கட்டுப்பாடு / பகுப்பாய்வகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் குத்து விளக்கு ஏற்றி வைத்து பகுப்பாய்வு ஆய்வகத்தை பார்வையிட்டார். உடன் துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க்ரிதி காம்னா தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் இந்திரா, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் (பொ) காளியப்பன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சந்திரா உள்ளிட்ட பலர் உள்ளனர்.



