சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுக்கான பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நகராட்சி ஆணையாளர் சபாநாயகம் ஆலோசனைப்படி சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி கைலாச சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தின் வியாபாரிகள் சங்கத்தினர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது மக்களுக்கு வியாபாரிகள் விற்பனை செய்வதை தவிர்க்கும் படியும் சக வியாபாரிகளின் வணிக நிறுவனங்களான ஹோட்டல்கள் டீ கடைகள் பெட்டிக்கடைகள் கறிக்கடைகள் காய்கறி கடைகள் பூக்கடைகள் உள்பட அனைத்து வகையான கடைகளில் விற்பனை செய்தால் விற்பனை செய்ய வேண்டாம் எனவும் பிளாஸ்டிக் விற்பனை தவிர்க்கும் படியும் ஆலோசனை வழங்கும்படி வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர் வியாபாரிகளும் நகராட்சி நிர்வாகத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்வோம் என உறுதி அளித்தனர் மேலும் வியாபாரிகள் கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகத்திடம் முன்வைத்து ஆலோசனைகள் வழங்கி நகராட்சி ஆலோசனைகளையும் வியாபாரிகள் ஏற்றுக் கொண்டன ர் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.



