நாகர்கோவில், ஜூலை 2 –
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், ஒழுகினசேரி பகுதியில் இரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி நாகர்கோவில் மாநகராட்சியின் மைய பகுதியில் உள்ளதால் போக்குவரத்து நெரிசலாக உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் வாகனங்களை மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளது.
கட்டுமானப்பணிகள் நடக்கும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் தகுந்த மாற்றுப்பாதைகளை சீரமைத்து, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. தற்போது பக்கசுவர் மற்றும் சாலைகள் அமைப்பதற்காக அருகில் உள்ள இடம் கையகப்படுத்தி, சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அருகில் உள்ள பொதுமக்களுக்கு எந்தவிதமாக இடையூறுகளின்றி பணிகளை தாமதிக்கமால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எந்தவிதமான காரணமும் கூறமால், தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர இரயில்வே கோட்ட பொறியாளர், மாநகராட்சி செயற்பொறியாளர் உள்ளிட்டவருக்கு அறிவுறுத்தபட்டது. இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆர்.ஐஸ்வர்யா, நாகர்கோவில் மாநகராட்சி செயற்பொறியாளர் ரகுராம், இரயில்வே உதவி செயற்பொறியாளர், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



