திருச்சி, ஏப். 22 –
திருச்சி மாவட்டம் லால்குடி நரிமேடு பகுதியைச் சேர்ந்த இருதயராஜ். நேற்று சமயபுரம் டோல் பிளாசா அருகே சாலையை கடக்க முயன்றபோது, மற்றொரு இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்தார். இதைத் தொடர்ந்து, பின்னால் வந்த டாடா ஏஸ் வாகனம் அவர் மீது ஏறி இறங்கியதில், தலையில் பலத்த காயமடைந்த இருதயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சமயபுரம் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திய டாடா ஏஸ் வாகன ஓட்டுநர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


