கிருஷ்ணகிரி, ஜன. 26 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில், தமிழ் மொழிக்காக உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் அதிமுக சார்பில் வீர வணக்கம் செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.
இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டத்தின் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தியாகிகளின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் ஆட்சியாளர்கள் இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்தபோது, தாய் மொழியாம் தமிழை கற்பதற்காக நடராஜ் போன்ற பலர் தன் இன்னுயிரை மாய்த்து தமிழை வளர்க்க பாடுபட்டனர்.
திமுக கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை 13 சதவீதம் மட்டுமே நிறைவேற்றி உள்ளது. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கூறிய நிலையில், முதல் இரண்டு வருடங்கள் வழங்காத நிலுவையில் வைக்கப்பட்டது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய பின்னரே குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி பொதுமக்கள் குறைகளை தீர்க்க அரசு அதிகாரிகள் நேரில் சென்று மனுக்கள் வாங்கினர். ஆனால் இதுவரை அம்மனுக்களுக்கான தீர்வுகள் தீர்க்கப்படவில்லை.
அதன் பின்னர் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, பெண்களுக்கான இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாளாக உயர்த்தப்படுவதாக அதிமுக வாக்குறுதிகள் வழங்கப்படுவதாக கூறினார்.



