நாகர்கோவில், ஜன. 6 –
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (எம்என்ஆர்இஜிஏ) ஒழித்து கட்டிய ஒன்றிய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள ஜி ராம் ஜி சட்ட நகல் கிழித்து குமரி மாவட்டத்தில் 6 மையங்களில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் முன்பு ஜி ராம் ஜி சட்ட நகல் கிழித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மிக்கேல் நாயகி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சி.முருகேசன், மாவட்ட இணை செயலாளரும் மாநகராட்சி நியமன உறுப்பினருமான எம்.அருள், துணை தலைவரும் புத்தளம் பேரூராட்சி நியமன உறுப்பினருமான சாந்தி குணசேகர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் மரிய செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் ரா.சுஜின் ஜெபராஜ் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் ஆர்.வில்சன், தாலுகா செயலாளர் ஏ.பென் ஜேக்கப் பேசினர். கல்குளம் தாலுகாவில் தக்கலை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா செயலாளர் என். சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ் சார்லஸ் ஆகியோர் பேசினர். தாலுகா தலைவர் மணிகண்டன், மாவட்டக்குழு உறுப்பினர் ஈசாக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கிள்ளியூர் தாலுகாவில் புதுக்கடை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி சட்ட நகல் கிழித்தெறியப்பட்டது. மாவட்ட துணை தலைவர் கே.ஜெயானந்த் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பி.விமல்ராஜ், தாலுகா செயலாளர் எஸ். ஆல்பர்ட் ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேல்புறம் கிளை தலைவர் ஒய.செல்லன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர், கே.முகமது புறோஸ் கான், பாகோடு பேரூராட்சி தலைவர், ஆர்.ஜெயராஜ் பேசினர்.
பூதப்பாண்டியில் உள்ள தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் பி. தமிழ்செல்வன் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ஆர்.லிட்டில் பிளவர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் த.மனோகர ஜஸ்டஸ், ஞான செல்வம் உள்ளிட்டோர் பேசினர். பலர் பங்கேற்றனர்.



