குளச்சல், டிச.19-
நாகர்கோவிலில் இருந்து பொழிக்கரைக்கு நேற்று மாலை ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ் பஸ் டிரைவராக ரமேஷ் (47) என்பவரும். கண்டக்டராக கண்ணபிரான் (37) என்பவரும் பணியில் இருந்தனர்.
பஸ் சூரங்குடி அருகே உள்ள அத்திக்கடை பகுதியில் செல்லும் போது, அதில் பயணம் செய்த இலந்தையடித்தட்டு, அண்ணா காலனியை சேர்ந்த தொழிலாளி செந்தில் ஆண்டவன் (46) என்பவர் திடீரென கண்டக்டர் கண்டபிரானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினார். உடனடியாக டிரைவர் ரமேஷ் பஸ்ஸை நிறுத்தினார்.
இதற்கிடையே செந்தில் ஆண்டவன் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி கல்லை எடுத்து வீசினார். இதில் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஈத்தாமொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில் ஆண்டவனை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
தாக்குதலில் காயம் அடைந்த கண்டக்டர் கண்ணபிரானை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில் ஆண்டவனை கைது செய்தனர்.



