நாகர்கோவில், ஜூலை 21 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் குறைகளை களைவதற்கு காலாண்டிற்கு ஒரு முறை சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அடிப்படையில் முன்னாள் இராணுவ வீரர்களின் குடும்பத்தினரிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இம்முகாமில் கருணை அடிப்படை வேலைவாய்ப்பு, நிலப்பிரச்சினை, பட்டா கோருதல உள்ளிட்டவைகள் என மொத்தம் 23 மனுக்களை முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் வழங்கியுள்ளார்கள். பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் உடனுக்குடன் தீர்வு காண வேண்டுமென துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



