சென்னை, ஏப்ரல் 24 –
துல்லியப் பொறியியலில் முன்னணியில் இருக்கும் ஆசாத் இன்ஜினியரிங், ஹைதராபாத், துனிகிபொல்லாரத்தில் துவக்குகிறது. இந்த ஆலை உலகளாவிய எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனமான பேக்கர் ஹியூஸ் நிறுவனத்திற்கு ஆதரவளிப்பதற்கான வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை குறிக்கும் வகையில், ஆசாத் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ராகேஷ் சோப்தார் கூறியதாவது: “பேக்கர் ஹியூஸ் உடனான எங்களின் எட்டு ஆண்டு காலப் பயணத்தில், இந்த பிரத்யேகமான லீன் உற்பத்தி ஆலையின் தொடக்க விழா ஒரு முக்கிய மைல் கல்லாகும்.
நாங்கள் இதுவரை மேற்கொண்டதிலேயே மிகவும் கடுமையான தகுதி நிர்ணயப் பாதைகளில் ஒன்றின் மூலம் 2018-ல் இந்த பங்களிப்பு தொடங்கியது. எரிவாயு மற்றும் நீராவி விசையாழிகளின் இறுதி நிலைகளுக்கான முக்கியமான சுழலும் ஏர்ஃபாயில்களை வழங்குவதில் பேக்கர் ஹியூஸ் உடனான எங்கள் பயணம் தொடங்கியது. அது பின்னர், தொழில்துறை மற்றும் எரிசக்தி தொழில்நுட்ப வணிகத்திற்கான ஒரு ஆழமான, மூலோபாயப் பங்களிப்பாக வளர்ந்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள துனிகிபொல்லாரத்தில் அமைந்துள்ள எங்களின் சிறப்பு மையத்தில் உள்ள இந்த 7,600 சதுர மீட்டர் ஆலை, பேக்கர் ஹியூஸுக்காக பிரத்தியேகமாக, நிறுவனத்திற்குள்ளேயே சிறப்புச் செயல்முறைத் திறன்களுடன் கூடிய ஒரு பிரத்யேகமான, உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை உருவாக்கும் எங்களின் திட்டமிட்ட உத்தியின் ஒரு பகுதியாகும்.
சுமார் 230 திறமையான தொழில் வல்லுநர்களுடன், அதிக அளவில் சிக்கலான பாகங்களை மைக்ரான்களில் அளவிடப்படும் தன்மையுடன் வழங்கக்கூடிய ஒரு உயர்-துல்லியமான சூழலமைப்பை நாங்கள் உருவாக்குகிறோம். இந்த ஆலை, இந்தியாவின் உற்பத்தி எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடாகவும், அதில் முன்னணியில் இருப்பதற்கான ஆசாத்தின் அர்ப்பணிப்பாகவும் விளங்குகிறது.” என்றார்.



