மக்களவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 543 ஆகவே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும், மாநிலங்களுக்கிடையேயான மக்களவைத் தொகுதிகளின் விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதைய அளவிலேயே தொடர வேண்டும் என்றும் முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும் அதன்பிறகு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில், மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தொகுதி மறுவரையறை தொடர்பான தனித் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்வைத்து அவர் பேசினார்.



