மயிலாடுதுறை மாவட்டம் பிரபல கல்வி நிறுவனங்களில் ஒன்றான டார்கெட் பள்ளி கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் குழுமத் தலைவர் மோகன்ராஜ் சிறுவயதில் தனது கடின உழைப்பால் இப்பள்ளியை தலைசிறந்த பள்ளியாக உருவாக்கியுள்ளார் . தனது ஆரம்ப காலகட்டத்தில் டியூஷன் சென்டர் ஆரம்பித்து 15 மாணவர்களுடன் ஆரம்பித்த இந்த கல்வி நிறுவனம் தனது விழா கடின முயற்சியால் இன்று 20 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் அளவிற்கு தனது நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் . வாழ்க்கையில் முன்னேற நினைக்கும் இளைஞர்களுக்கு இவர் ஒரு ரோல் மாடலாக உள்ளார். இவரது பிறந்த நாள் விழா மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர்.இதில் அவரது நண்பர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் தனது ஒரு உறவினர் வீட்டு விழா போல் அனைவரும் கலந்து கொண்டு பள்ளியின் குழுமத் தலைவர் மோகன்ராஜ் பிறந்தநாளை கேக் வெட்டி பண மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர் .



