தஞ்சாவூர், ஜூலை 7 –
அரசு தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு விண்ணப்பிக்க வருகிற 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் தொழில் பயிற்சி படிக்க விரும்புவோர் அசல் கல்வி சான்று (எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி ) ஜாதி சான்றிதழ் மற்றும் சாதிசான்றிதழ், ஆதார் அட்டை, மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண், புகைப்படங்களை கொண்டு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தி அடைந்த வரும் அதிகபட்சம் ஆண்களுக்கு 40 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதுமில்லை. இதை போல் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களிலும் சேர விண்ணப்பிக்கலாம். அரசு மற்றும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர www.skillraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50 டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், ஜிபே வழியாக செலுத்தலாம் விண்ணப்பதாரர்கள் உரிய அசல் கல்வி சான்றிதழ்களை கொண்டு வருகின்ற 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



