கிருஷ்ணகிரி, ஜூலை 21 –
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட போத்தாபுரம் மற்றும் ஜெகதாப் ஆகிய இடங்களில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு இயக்கம் எழுச்சியுடன் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்களின் உதிரவின்படியும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் அவர்களின்
வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற இந்த ஊழலுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு வட்டாரத் தலைவர் மாரியப்பன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர்
சத்திவேல் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
ஊழக்கு எதிராக நடைப்பெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தினை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு பெருந்தலைவர் காமராஜரின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவர் தனது கையெழுத்தைப் பதிவு செய்து இயக்கத்தையும் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் மாவட்ட தலைவர்களான கிருஷ்ணமூர்த்தி, நாரயணமூர்த்தி மாவட்ட துணைத்தலைவர் ரகமத்துல்லா, டாக்டர் தகி, மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, ஓ.பி.சி. மாவட்டத்தலைவர் கவியரசு, மீனவரணி மாவட்ட தலைவர் செல்வம் முன்னாள் மாவட்ட அமைப்பு சார தலைவர் சென்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து ஊழலுக்கு எதிராக கையெழுத்திட்டனர்.
மேலும் இதே போல ஜொகதாப் கிராமத்தில் நடைப் பெற்ற கையெழுத்து இயக்கத்தில் நகர தலைவர் ஸ்ரீராம் மற்றும் சக்கரவர்த்தி, ஆஜீத்பாஷா, பூபதிராமராஜ், கார்த்திக், கோபால், ராமமூர்த்தி, சங்கர், அருண்,கிருஷ்ணன், சந்திரன், சின்னசாமி, கந்தன், பீமராஜ், திருப்பதி ஆகியோர் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அவர்கள் தனது கையெழுத்தைப் பதிவு செய்ததோடு தங்களது கைகளை வண்ணச் சாயத்தில் நனைத்து, அந்த கைரேகையை அடையாளமாகப் பதிவிட்டனர்.
‘ஊழலுக்கு எதிராக எங்களது கைகள் என்றும் கறைபடாது’ என்பதை உணர்த்தும் விதமாக அமைந்த இந்த புதுமையான விழிப்புணர்வு முயற்சியில் பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டனர்.



