தஞ்சாவூர். மே.13
தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.11.82 கோடி செலவில் 16 புதிய கட்டடங்கள் திறந்து வைத்து ரூ.7.45 கோடி மதிப்பீட்டில் 13 புதிய கட்டிடங்கள். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் , தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார்,தஞ்சாவூர் மாநகராட்சிமேயர்சண்.இராமநாதன ,மாநகராட்சி துணை மேயர் மருத்துவர்அஞ்சுகம்பூபதி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் கோ.பாலசுப்பிரமணியன்,இணை இயக்குநர் (சுகாதாரம்) மருத்துவர் செல்வகுமார் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் பா.கலைவாணி ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேசியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.5.கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய முழு உடல் பரிசோதனை மையமும், ரூ.15 இலட்சம் செலவில் மூன்றாம் பாலினத்தவருக்கான பன்னோக்கு சிகிச்சை மையம் மற்றும் ரூ.1.34 கோடி செலவில் 28 படுக்கைகள் கொண்ட கட்டண படுக்கை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காணொலிக் காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூ.60 இலட்சம் செலவில் மகர்நோம்பு சாவடி ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் கட்டடம், ரூபாய் 60 இலட்சம் செலவில் கரந்தை ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் கட்டடம், ரூபாய்.30 இலட்சம் செலவில் கணபதிநகர் துணை சுகாதார நிலையம் கூடுதல் கட்டடம், ரூபாய்.30 இலட்சம் செலவில் செங்கமலை நாச்சியார் துணை சுகாதார நிலையம் கூடுதல் கட்டடம். , ரூபாய்.30 இலட்சம் செலவில் அருளானந்த நகர் துணை சுகாதார நிலையம் கூடுதல் கட்டிடம், ரூபாய்22 இலட்சம் செலவில் மகர்நோம்பு சாவடி ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வக கட்டிடம், ரூபாய்30 இலட்சம் செல வில் அருளானந்த நகர் நகர்புற துணை சுகாதார நிலையம் கட்டடம், ரூபாய் 30 இலட்சம் செலவில் முனியாண்டவர் நகர் நகர்புற துணை சுகாதார நிலையம் கட்டடம், ரூபாய் 61.72 இலட்சம் செலவில் நடுக்காவேரி வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், ரூபாய் .39,68 இலட்சம் செலவில் ஆலக்குடி துணை சுகாதார நிலையம் கட்டடம், ரூபாய் 39.68 இலட்சம் செலவில் சித்திரக்குடி துணை சுகாதார நிலையம் கட்டடம், ரூபாய்.40.32 இலட்சம் செலவில் மணக்கரம்பை துணை சுகாதார நிலையம் கட்டடம், ரூபாய்.60 இலட்சம் செலவில் காசவளநாடுபுதூர் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் என மொத்தம் ரூபாய் 11.82 கோடி செலவில் 16 புதிய கட்டடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப் பட்டுள்ளது.
தொடர்ந்து, காணொலிக் காட்சி வாயிலாக ரூபாய்.45 இலட்சம் மதிப்பீட்டில் இளங்காடு துணை சுகாதார நிலையம்,. ரூபாய் 45 இலட்சம் மதிப்பீட்டில் செங்கிப்பட்டி துணை சுகாதார நிலையம், ரூபாய்.45 இலட்சம் மதிப்பீட்டில் கல்யாணபுரம் துணை சுகாதார நிலையம், ரூபாய்.65 இலட்சம் மதிப்பீட்டில் அழகிநாயகிபுரம் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், ரூபாய்.45 இலட்சம் மதிப்பீட்டில் இடையாத்தி துணை சுகாதார நிலையம், ரூபாய்.45 இலட்சம் மதிப்பீட்டில் ஒட்டங்காடு துணை சுகாதார நிலையம், ரூபாய்.75 இலட்சம் மதிப்பீட்டில் பெரியக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் கட்டடம், ரூபாய்.75 இலட்சம் மதிப்பீட்டில் ஏனாதி ஆரம்ப சுகாதார நிலையம் கூடுதல் கட்டடம், ரூபாய்.45 இலட்சம் மதிப்பீட்டில் கீழக்குறிச்சி துணை சுகாதார நிலையம்., ரூபாய் 65 இலட்சம் மதிப்பீட்டில் வல்லம் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், ரூபாய்.65 இலட்சம் மதிப்பீட்டில் கோணுலாம்பள்ளம் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், ரூபாய் 65 இலட்சம் மதிப்பீட்டில் முருக்கங்குடி வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், ரூபாய்.65 இலட்சம் மதிப்பீட்டில் திருவோணம் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம் என மொத்தம் ரூபாய்.7.45 கோடி மதிப்பீட்டில் 13 புதிய கட்டடங்கள் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 65.80 கோடி மதிப்பில் 80 கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ரூபாய் 2.89 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருந்தாக்கியல் துறைக் கட்டிடம் ரூபாய்.46 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் ரூபாய்23.75 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு. ரூபாய்.1.40 கோடி மதிப்பீட்டில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை. திறன் மையம் , ரூபாய்.33.50 இலட்சம் மதிப்பீட்டில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆயுர்வேத சிகிச்சை கட்டிடம் ரூபாய்.1.20 கோடி மதிப்பீட்டில் வல்லம் ஆரம்ப சுகாதார நிலையம். ரூபாய்.50 இலட்சம் மதிப்பீட்டில் கபிஸ்தலம் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், ரூபாய் 60 இலட்சம் மதிப்பீட்டில் துகிலி ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடம், ரூபாய்.45 இலட்சம் மதிப்பீட்டில் திருச்சேரல் துணை சுகாதார நிலையம் போன்ற பல்வேறு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை கட்டடப் பணிகள் ரூபாய்.108.08 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
விரைவில் கட்டடப் பணிகள் முடிவுற்று திறக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம். இதயம் காப்போம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம். பாதம் பாதுகாப்போம். நடப்போம் நலம் பெறுவோம். மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம். தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, தஞ்சாவூரில் மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் வழி காட்டுதலின் படி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம். இன்னுயிர் காப்போம். கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம். இதயம் காப்போம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம், பாதம் பாதுகாப்போம். நடப்போம் நலம் பெறுவோம். மக்களைத் தேடி மருத்துவ ஆய்வக திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பெரும்பங்கு வகிக்கிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் இந்தியாவில் தமிழ்நாடு தான் சிறந்து விளங்குகிறது. கல்வித் துறையில் இல்லம் தேடி கல்வி போல் மருத்துவத் துறையில் மக்களைத் தேடி மருத்துவம் போன்ற சிறப்பான திட்டமாகும். இதுபோன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனை மனதில் கொண்டு செயல்படுத்தி வருகிறார் என பேசினார்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வு துறை மூலம் ரூபாய் 2.37 இலட்சம் மதிப்பிலான செயற்கை கால்கள் 4 பயனாளிகளுக்கும், ஏழைத்தாய் மார்களுக்கு சத்துணவு பெட்டகமும் வழங்கினார்கள்.
மாநகராட்சி ஆணையர் க.கண்ணன்,மாநகர நல அலுவலர் மருத்துவர் நமச்சிவாயம். பொதுப்பணித்துறை கட்டடம் செயற்பொறியாளர் நாகவேல், கோட்டாட்சியர் இலக்கியா, மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் க.ராமசாமி. நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் அ.செல்வம்,உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் மருத்துவர் கு.ஹா.முகமது இத்ரீஸ், மருத்துவர் அ.முத்து மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தஞ்சாவூர் அரசு இராசாமிராசு தார் மருத்துவமனையில் கடந்த 24.04.2025 அன்று குளிரூட்டும் இயந்திரத்தில் மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து பகுதியினை பார்வையிட்டு மருத்துவமனயின் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.



