நாகர்கோவில், மே 18 –
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காந்திநகர் புதுகுடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடை எண் 4713 ஐ திறக்கக் கூடாது என கூறி அப்பகுதி பொதுமக்கள் கடை வாசலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் திருமண மண்டபம், தேவாலயம், இந்து கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் இருப்பினும் கடையை அடைக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை என குற்றச்சாட்டி உடனடியாக அப்பகுதி மக்களின் நலன் கருதி மதுக்கடையை அடைக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் 717 டாஸ்மார்க் மதுபான கடைகளை அடக்க உத்தரவிட்டார். அதில் கோவில்கள், கல்வி நிறுவனங்கள் பேருந்து நிலையம் இருக்கும் பகுதியில் இருந்து 500 மீட்டர் இடைவெளியில் உள்ள மதுபான கடைகளை அடைக்க உத்தரவிட்டார். அதன்படி முதற்கட்டமாக அடைக்கப்பட்டது. மேலும் சில கடைகள் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடம் அருகாமையில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தமிழகம் முழுவதும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காந்திநகர் பகுதியில் உள்ள கடை எண் 4713 என்ற கடையை அடைக்க வேண்டும் என பொதுமக்கள் போராடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மதுபிரியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி சண்டையிடுவதாகவும் குற்றம்சாட்டி மதுக்கடை வாசல் முன்பு குவிந்து கடை அடைக்க கோஷங்களை எழுப்பி போராடினர்.
மேலும் மதுகடை அருகே உள்ள குளத்தில் விழுந்து குடிபோதையில் மது பிரியர்கள் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த மதுக்கடைகளை திறக்க விடமாட்டோம், மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொள்ளாமல் மதுக்கடையை அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். உடனடியாக கடையை அடைக்க நடக்கவில்லை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு டாஸ்மார்க் மதுபான கடை நுழைவாயிலை அடைத்தனர். மேலும் போராட்டம் நடத்தியவர்களை பார்த்து இனி இந்த நுழைவாயில் திறக்கப்பட மாட்டாது. எனவே நீங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நீண்ட நேரமாக ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.



