By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புது குடியிருப்பு பகுதி மதுபான கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்: நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் கைவிடப்பட்ட போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புது குடியிருப்பு பகுதி மதுபான கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்: நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் கைவிடப்பட்ட போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புது குடியிருப்பு பகுதி மதுபான கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்: நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் கைவிடப்பட்ட போராட்டம்

Last updated: May 18, 2026 6:07 pm
May 18, 2026
18 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 18 –

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காந்திநகர் புதுகுடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மார்க் மதுபான கடை எண் 4713 ஐ திறக்கக் கூடாது என கூறி அப்பகுதி பொதுமக்கள் கடை வாசலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் திருமண மண்டபம், தேவாலயம், இந்து கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் இருப்பினும் கடையை அடைக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை என குற்றச்சாட்டி உடனடியாக அப்பகுதி மக்களின் நலன் கருதி மதுக்கடையை அடைக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.

தமிழக முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் 717 டாஸ்மார்க் மதுபான கடைகளை அடக்க உத்தரவிட்டார். அதில் கோவில்கள், கல்வி நிறுவனங்கள் பேருந்து நிலையம் இருக்கும் பகுதியில் இருந்து 500 மீட்டர் இடைவெளியில் உள்ள மதுபான கடைகளை அடைக்க உத்தரவிட்டார். அதன்படி முதற்கட்டமாக அடைக்கப்பட்டது. மேலும் சில கடைகள் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடம் அருகாமையில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தமிழகம் முழுவதும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காந்திநகர் பகுதியில் உள்ள கடை எண் 4713 என்ற கடையை அடைக்க வேண்டும் என பொதுமக்கள் போராடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மதுபிரியர்கள் தகாத வார்த்தைகளால் பேசி சண்டையிடுவதாகவும் குற்றம்சாட்டி மதுக்கடை வாசல் முன்பு குவிந்து கடை அடைக்க கோஷங்களை எழுப்பி போராடினர்.

மேலும் மதுகடை அருகே உள்ள குளத்தில் விழுந்து குடிபோதையில் மது பிரியர்கள் உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த மதுக்கடைகளை திறக்க விடமாட்டோம், மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொள்ளாமல் மதுக்கடையை அடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். உடனடியாக கடையை அடைக்க நடக்கவில்லை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு டாஸ்மார்க் மதுபான கடை நுழைவாயிலை அடைத்தனர். மேலும் போராட்டம் நடத்தியவர்களை பார்த்து இனி இந்த நுழைவாயில் திறக்கப்பட மாட்டாது. எனவே நீங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என கேட்டுக் கொண்டனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நீண்ட நேரமாக ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

விளம்பரம்

You Might Also Like

டிசம்பர் 24-ல் இந்திய அஞ்சல் துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தஞ்சாவூரில் மாணவர்களை தன்னார்வலராக மாற்றும் கோடைக்கால பயிற்சி முகாம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பங்கேற்பு
தொட்டியம் திருவிழாவில் சோகம்: கதண்டு கடித்து 60 பேர் காயம்
கூட்டுறவு ஊழியர்களுக்கு பணிக்கொடை; கலெக்டரிடம் மனு
கடையால் அருகே மாசடைந்த குடிநீர் விநியோகம்: மக்கள் முயற்சியால் உடனடி தீர்வு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மயிலாடுதுறை ஆசிரியைக்கு அறிவுச்சுடர் விருது

September 9, 2025
55 Views
தமுமுகவின் 31 வது ஆண்டு தொடக்கவிழா முன்னிட்டு நூலகம் திறப்பு விழா
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கோரி மனு
மதங்களை கடந்து மனிதநேயம் இன்னும் வாழ்கிறது
3-வது உலக திருக்குறள் சாதனையாளர்கள் மாநாடு திருப்பூர் கவிஞருக்கு விருது வழங்கப்பட்டது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account