ஈரோடு, மே 27 –
அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரும் முன்னாள் எம்பியுமான செல்லக்குமார் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மறைமுகமாகவோ பின் வாசல் வழியாகவோ ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் எப்போதும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும். காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக காங்கிரஸ் கட்சி எப்போதும் அனுமதிக்காது. எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் காங்கிரஸ் கட்சி எப்போதும் முதுகில் குத்துவது என்பது போன்ற தோற்றத்தை கட்டமைக்க முயற்சி செய்கிறார்.
பாரதிய ஜனதா அரசுக்கு அதிமுக அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதும் திமுக பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தது. இது துரோகமாக திமுகவுக்கு துரோகமாக தெரியவில்லையா அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. முதலமைச்சர் விஜய் கால அவகாசம் எடுத்து கொண்டு தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
கோவையில் 10 வயது சிறுமியின் கொலைக்கு காரணமான வர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட தலைவர்கள் ராஜேஷ், ராஜப்பா, முத்துக்குமார், மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், புனிதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



