By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சபரிவர்மனின் உடலை 5 நாட்களுக்கு பின் பெற்றுக்கொண்ட உறவினர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சபரிவர்மனின் உடலை 5 நாட்களுக்கு பின் பெற்றுக்கொண்ட உறவினர்கள்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சபரிவர்மனின் உடலை 5 நாட்களுக்கு பின் பெற்றுக்கொண்ட உறவினர்கள்

Last updated: July 17, 2026 6:34 pm
July 17, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 17 –

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அருகே ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர், வீட்டருகே நடத்தி வந்த பெட்டிக்கடையில் குட்கா புகையிலை விற்றதாக கடந்த 9ந் தேதி கைது செய்யப்பட்டு நாகர்கோவில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் கடந்த 13ந் தேதி அதிகாலை அவர் இறந்த நிலையில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சபரிவர்மன் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. 19 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவரை சிறையில் வைத்து தாக்கியதாக வார்டன்கள் ஜெகன், திருமலைநம்பி, சிவகுமார் ஆகிய 3 பேரும், 8 சிறை கைதிகளும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சபரிவர்மனின் குடும்பத்தினர், அவரது பிரேத பரிசோதனை வீடியோவை தங்களுக்கு நம்பிக்கையுள்ள மருத்துவர்கள் மூலம் மறுஆய்வு செய்த பின்னரே அவரது உடலை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். இதனால் 4 நாட்களாக சபரிவர்மனின் உடலை பெற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு ஈத்தங்காட்டில் உள்ள சபரிவர்மனின் வீட்டிற்கு அமைச்சர்கள் ராஜேஷ்குமார், ஸ்ரீநாத், குமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் சென்றனர். அவர்கள் சபரிவர்மனின் மனைவி ஆனந்தவல்லி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சபரிவர்மனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். அத்துடன் உடலை பெற்றுகொள்ள வேண்டும் என்றார். இதற்கு, உடற்கூறாய்வு வீடியோவை ஆய்வு செய்த பின்னர் பிரேத பரிசோதனையில் எங்களுக்குள்ள சந்தேகம் தீரும். அதன் பின்னர் உடலை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.

அதன்படி இன்று சபரிவர்மனின் உடற்கூறாய்வு குறித்த வீடியோ காட்சிகளை அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்கள் தரப்பிலான மருத்துவர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், சந்தேகத்திற்கிடமான அம்சம் ஏதும் இல்லை என்பதை குடும்பத்தினர் ஒத்துக்கொண்டு உடலை வாங்க சம்பதித்தனர்.

சபரிவர்மன் இறந்து 5வது நாளான இன்று மாலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்து அவரது உடலை மனைவி ஆனந்தவல்லி மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அவரது ஊரில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த 5 நாட்களாக நீடித்த சிறையில் கொலையான சபரிவர்மனின் பிரச்சினை முடிவிற்கு வந்தது.

விளம்பரம்

You Might Also Like

ஒ பை தாமரா உணவகத்தில் ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்க விழா
கோவிலுக்கு செல்லும் பாலம் இடிந்தது 3 பேர் காயம்
விவசாய இலவச மின் இணைப்புக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிச.31 வரை அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் டிஆர்பி. ராஜாவுக்கு டெல்டா விவசாயிகள் நன்றி
இந்தியா முழுவதும் சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்
கன்னியாகுமரியில் அதிகாலையில் விபத்து: 6 பேர் தப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

பாரத் கேஸ் ஏஜென்சி சார்பில் எரிவாயு உருளை

December 2, 2024
97 Views
நற்சான்றிதழ் வழங்க கோரிக்கை
களியக்காவிளை அருகே இசக்கி அம்மன் கோவிலில் 36 கிலோ வெண்கல விளக்கு திருடிச் சென்றவர் கைது
வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் செய்ததை கண்டித்து பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்
தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account