தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராஜகோபால் கவுண்டர் பூங்காவில் இருந்து கட்சியினர் ஊர்வலமாக வந்து நான்கு ரோடு அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நகர கழகச் செயலாளர் நாட்டான் மாது, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட் டான் மாது, மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகரத் துணைத் தலைவர் முல்லைவேந்தன், மே.அன்பழகன், ஒன்றிய செயலாளர் பெரியண்ணன், இளைஞர் அணி வெங்கடேசன் மற்றும் மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தருமபுரி உழவர் சந்தையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 – வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டியும், நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு காய்கறி தொகுப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம் பி, முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் தங்கமணி,அக்ரி இளங்கோவன், உதவி ஆய்வாளர் பாண்டுரங்கன், பாலை அன்பு, செல்லதுரை, பாலாஜி, இளைஞர் அணி அசோகன், ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா



