தஞ்சாவூர், மே 26 –
தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள இரும்பின் பாலம் அருகே கல்லணை கால்வாய் இடது கரையில் நடை பாதை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்து தெரிவித்ததாவது: நீர்வளத்துறை மூலம் இர்வின்பாலம் முதல் எம்கே மூப்பனார் சாலை வரை உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் நடைபாதையில் சேதமடைந்துள்ள கான்கிரீட் தூண்களை அகற்றி இரும்பலான தூண்கள் அமைக்கப்படுகின்றன.
மேலும் நடைபாதையில் உள்ள சேதமடைந்த மின்விளக்குகளை அகற்றி புதிய மின்விளக்குகள் அமைக்கும் பணி சுமார் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது என்றார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் கல்லணை கால்வாய் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



