தருமபுரி, ஜனவரி 28 –
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளியில் தேசியக்கொடி அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500 மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 26ம் தேதி குடியரசு தின விழா பள்ளியில் கொண்டாடப்பட்டது. அதன் காரணமாக தேசிய கொடியேற்றப்பட்டது. ஆனால் மாலை 5 மணிக்கு மேல் தேசிய கொடியை இறக்கி விட வேண்டும்.
ஆனால் யாரும் தேசியக் கொடியினை இறக்கவில்லை. இரவு முழுவதும் கம்பத்திலேயே இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பள்ளியில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள் தேசியக்கொடி இறக்கப்படாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே காலை 9 மணியளவில் தேசியக்கொடி இறக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: பள்ளிகளில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமைகளில் தேசியக்கொடி ஏற்றப்படுவது வழக்கம். ஆனால் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் லோகநாதன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமைகளில் இதுவரை தேசிய கொடி ஏற்றப்படவில்லை. மேலும் சுதந்திர தின மற்றும் குடியரசு தின நாட்களில் கொடிகள் ஏற்றப்பட்டாலும் அவமதிக்கப்படும் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூறினர். இது குறித்து அதிகாரிகள் முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள்.



