தென் தாமரைகுளம், ஏப். 27 –
பூவியூர் இந்து நாடார் சமுதாயவகை தேவி முத்தாரம்மன் திருக்கோவில் மண்டல பூர்த்தி பூஜை மற்றும் சித்திரை கொடைவிழா நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாள் விழாவான நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு மஹாகணபதி ஹோமம் மற்றும் தீபாராதனை, காலை 8 மணிக்கு கலசபூஜை, தீபாராதனை, 10.30 மணிக்கு பிரம்ம கலச பூஜையும் அதனைதொடர்ந்து தீபாராதனையும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு கடல் நீராடுதல், இரவு 7மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, 7.30 மணிக்கு சிற்றுண்டி வழங்குதல், 8 மணிக்கு நையாண்டிமேளம், 9.30 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சாஸ்தாவுக்கு தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சுவாமிக்கு தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு பத்திரகாளி அம்மனுக்கு தீபாராதனை, 3 மணிக்கு முத்தாரம்மனுக்கு தீபாராதனையும் நடக்கிறது.
இரண்டாம் நாளான நாளை மறுநாள் புதன்கிழமை காலை 9 மணிக்கு நையாண்டிமேளம், 10 மணிக்கு வில்லிசை, நண்பகல் 12 மணிக்கு முத்தாரம்மனுக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு சமபந்தி விருந்து, பிற்பகல் 2 மணிக்கு மஞ்சள்மாரி, வெள்ளை மாரி அம்மன் சாமிகளுக்கு தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், மாலை 3 மணிக்கு உஜ்ஜைனி மாகாளி அம்மனுக்கு தீபாராதனை, இரவு 7மணிக்கு செண்டைமேளம், 8 மணிக்கு நையாண்டிமேளம், 10 மணிக்கு வில்லிசை, 1 மணிக்கு தேவி முத்தாரம்மனுக்கு தீபாராதனை, 1. 30 மணிக்கு தேவி முத்தாரம்மன் அருளாசி வழங்க சிம்ம வாகனத்தில் வீதி உலா வருதலும் நடக்கிறது.
மூன்றாம் நாளான வியாழக்கிழமை காலை 9 மணிக்கு சுடலைமாட சுவாமி மற்றும் காவல் தெய்வங்களுக்கு தீபாராதனை, 11 மணிக்கு அன்னதானம், 11.30 மணிக்கு அருள் பிரசாதம் வழங்குதலுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.



