தஞ்சாவூர், அக். 30 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் 305 மாணவ – மாணவிகளுக்கு ரூபாய் 23.62 கோடி கல்வி கடனை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் ஒருங்கிணைந்து உயிர் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கும் விழாவை நடத்தியது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். முரசொலி எம்பி, துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடனுக்கான காசோலைகளை வழங்கி மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க அனைத்து மாவட்ட மேலும் கல்விக்கடன் விழிப்புணர்வு மற்றும் எளிதாக்கல் முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளில் ஒருங்கிணைந்து கடன் கல்வி கடன் வழங்கும் விழா நடைபெற்று, நிகழ்ச்சியில் 11 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பங்கேற்று உள்ளன. இதில் 305 மாணவ மாணவிகள் மொத்தம் ரூபாய் 23.62 கோடி வங்கி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிதியாண்டில் மொத்தம் 1841 விண்ணப்பங்கள் வித்யாலட்சுமி இணையதளம் மூலம் வர பெற்றுள்ளது. இதில் இதுவரை 952 விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 71.86 கோடி மதிப்பிலான கல்வி கடன் நமது மாவட்டத்தில் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 422 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. நமது மாவட்டத்தில்
நிதியாண்டின் 2500 மாணவ மாணவிகள் கடன் வழங்கத்தக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. எனவே உயர் கல்வி பயில விரும்பும் மனமும் மனைவிகள் வித்யா லட்சுமி என்ற இணையதளம் மூலம் விண்ணப்பி த்து கல்வி கடன் வசதி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட வருவாய் அலுவலக தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தாசில்தார் சிவக்குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் சுப்ரமணியன், நபார்ட் வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் துர்கா, 2மாமகேஸ்வரி முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் மற்றும் 11 தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



