தஞ்சாவூர், செப்டம்பர் 8 –
தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் போலீசார் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். மேலும் அனைத்து மக்களிடமும் போலீசார் விருப்பு, வெறுப்பின்றி பணி புரிய வேண்டும். பணியாற்றும் போது சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது பற்றியும், காவல்துறையின் குறிக்கோளான கனிவான வார்த்தை, உறுதியான அமலாக்கம் என்பதை செயல்படுத்தவும், அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதை தொடர்ந்து தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்திலும் போலீசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் காவலர் நல்லுறவு, கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள்கள் ஒழிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



