திருப்பூர் ஜூன்: 20
பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலை உள்ள தியாகிகள் நினைவிடத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. 1970 ஜூன் 19ஆம் தேதி ஒரு பைசா மின் கட்டண உயர்வுக்கு எதிரான விவசாய சங்க போராட்டத்தின் போது காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி துப்பாக்கி சூட்டில் வீர மரணம் அடைந்த தியாகி மாரப்ப கவுண்டர். ஆயிக்கவுண்டர். ராமசாமி கவுண்டர். மூவருக்கும் நினைவஞ்சலி நடைபெற்றது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை. நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மாநில பொருளாளர் கே கே சி.பாலு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ரோபோ ரவிச்சந்திரன். துணைச் செயலாளர் தம்பி வெங்கடாசலம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார். அவைத்தலைவர் சுரேஷ்குமார். இளைஞர் அணி செயலாளர் செல்வகுமார். வடக்கு மண்டல செயலாளர் வேலுச்சாமி. தெற்கு மண்டல செயலாளர் கனகராஜ். மற்றும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை 500 க்கு மேற்பட்ட நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.



