இரணியல், பிப். 6 –
இரணியல் அருகே பாறைக்காவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ரெதீஸ் (33). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். ரெதீஸ் டெம்போ வாகனம் ஓட்டி வந்தார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் சென்று விட்டு திரும்பி வரும் வழியில் சுங்கான் கடை சந்திப்பு அருகே வந்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கேரளா கார் மோட்டார் சைக்கிளில் பின் பக்கம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் உறவினர்கள் நண்பர்கள் மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவர் மனைவி ஷாலினி அளித்த புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் கேரளா மாநிலத்தில் பதிவு எண் கொண்ட காரை ஓட்டி வந்த ஆலப்புழா மாவட்டத்தில் சேர்ந்த செல்வராஜ் (44) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



