கோவை, ஜூன் 17 –
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் நடைபெற்றது.
உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் த.குமரேசன், ர.சரஸ்வதி, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மண்டல குழுத்தலைவர்கள் வே. கதிர்வேல், இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், ர.தனலட்சுமி கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மீனா லோகு, நிலைக்குழுத் தலைவர்கள் தீபா தளபதி இளங்கோ, மாலதி நாகராஜ், பெ.மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), வி.பி.முபசீரா சாந்தி முருகன், சோமு (எ) சந்தோஷ், சா.குமார ராஜபாண்டியன் நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



