களியக்காவிளை, ஏப். 17 –
களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சத்தியதாஸ் (57). விவசாயி. இவருக்கு படந்தாலுமூடு, சந்தவிளை என்ற பகுதியில் தென்னந்தோப்பு சொந்தமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது சந்த விளையில் உள்ள தென்னந்தோப்பில் சத்தியதாஸ் மயங்கி கிடப்பதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது சத்தியதாஸ் அருகே விஷ பாட்டில் கிடந்துள்ளது. விஷம் குடித்ததை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சத்யதாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


