கோவை, மே 1 –
கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் தொழிலாளர் தின முப்பெரும் விழா, கோவை எக்னாமிக் சேம்பர் ஜி எம் நகர் நற்பணி குழு இணைந்து நடத்தும் பெண்களுக்கான மருத்துவ முகாம்
சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜி முகமம்து ரபீக் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருத்துவ முகாம், மஞ்சப்பை உறுதிமொழி ஏற்பு, நெகிழி இல்லா ஜி எம் நகரை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி வீட்டில் இருந்து வருமானத்தை ஈட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி, வருமானத்தை ஈட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சமூக நீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி முகம்மது ரஃபிக் கூறியதாவது: மத்திய மாநில அரசுகள் தொழிலாளர் விரோத சட்டங்களையும் நலவாரிய தொழிலாளர்களுக்கு ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போன்ற செயல்பாட்டை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தமிழ்நாட்டில் 18 வகையான அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் இருக்கின்றது. இதில் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மட்டும் பாதுகாப்பு நிதி வருவாய் உள்ளதால் நலத்திட்ட உதவிகள் மற்றும் பண பலன்கள் விரைந்து கிடைக்கிறது. இது ஒரு கண்ணில் வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் உள்ளது.
மற்ற 17 வகையான நலவாரிய தொழிலாளர்களுக்கு பாதித் திட்டங்கள் கூட கிடைப்பதில்லை. உதவித் தொகை மற்றும் பணப்பலன் கிடைப்பதில் தாமதம் ஆவதால் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வு காண 18 வகையான நல வாரியங்களுக்கும் நிரந்தர நிதி ஆதாரத்தை உருவாக்கி ஒரே வகையான நலத்திட்டங்கள் வழங்கிட வழிவகை ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற தொழிலுக்கேற்ப தொழில் இயந்திரம் வழங்கினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் மேலும் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகை கிடைக்கும்.
கோவையில் அண்மையில் நடைபெற்ற மண்டல மாநாட்டில் வைத்த கோரிக்கைகளில் பல கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி. இது போல் மேலே குறிப்பிட்ட சில முக்கியமான கோரிக்கைகளையும் நிறைவேற்றிட 2026 மே தினத்தில் தொழிலாளர்கள் சார்பாக அரசை வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.
உடன் சமூகநீதி கூட்டமைப்பு தலைவர் வெங்கடேசன், மாமன்ற உறுப்பினர் எஸ் டி பி ஐ கட்சி 84 வது வார்டு அலிமா ராஜா உசேன், முஸ்தாக், கவுன்சிலர் மயிலை செந்தில், லயன்ஸ் ஏ அருள் தாஸ், குரூஸ் மேரி, நூர்ஜஹான், பமீலா, அம்லு, ஜோதி, பௌசியா, தௌலைத் நிசா ஆகியோர் கலந்து கொண்டனர்.



