கோவை, மே 07
கோவை வடவள்ளி பகுதியில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் மே 43 வது வியாபாரிகள் தின மாநாடு தலைவர் எஸ் எம் பி முருகன், பொதுச் செயலாளர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் சங்க வளர்ச்சிகள் குறித்தும், பொது சேவைகள் குறித்தும் கலந்துரையாடினர். மேலும் மூத்த பத்திரிகையாளர் கருணாகரன் சங்க கொடி ஏற்றி துவக்கி வைத்தார். பொதுச் செயலாளர் உதயகுமார் காந்தி படத்தை திறந்து வைத்தார். பொருளாளர் சிலுவை முத்துக்குமார் எம் ஆர் முருகன் படத்தை திறந்து வைத்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை நாடார் சங்கத் தலைவர் பாஸ்கரன் அண்ணாச்சி, நிறுவனர் முத்தூஸ் மருத்துவமனை முத்து சரவணகுமார், குஜன் பிராப்பர்ட்டீஸ் உரிமையாளர் குமார், கடைவீதி கிளை தலைவர் மணி ஆர்த்தி அசோசியேட்ஸ் முருகானந்தம் கிருபா மருத்துவமனை டென்னிஸ் கோவில்பிள்ளை ஆர் எஸ் ஏ மெட்டல் நிறுவனர் ராஜ்குமார் செந்தில்குமார், தீன தயாளன், மருதாச்சலம். மேலும் வருகை புரிந்த கிளை நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கி சிறப்பித்தனர்.



