கிருஷ்ணகிரி, ஜூலை 2 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவர் திட்டம் மூலம் 12.08.2025 முதல் இல்லங்களுக்கே நேரடியாக சென்று குடிமைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக்கடைகளில் உள்ள 29,287 வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைகளுக்கு தாயுமானவர் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு சென்று குடிமைப்பொருட்கள் வழங்க ஒரு நாள் குழு 155 மற்றும் இரண்டு நாள் குழு 154 என மொத்தம் 309 குழு அமைக்கப்பட்டு, 463 வாகனங்களை கொண்டு விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூலை 2026 ஆம் திங்களில் 04.07.2026 மற்றும் 06.07.2026 ஆகிய தேதிகளில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைகளுக்கு விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.



