திருப்பூர், ஜூலை 18 –
லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் ஜோஸ் சார்லஸ், எம்எல்ஏ மார்ட்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா அவர்களின் ஆலோசனை படியும் இந்திய தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், திருப்பூர் கொடிகாத்த குமரன், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில துணைப் பொதுச்செயலாளர் குளோபல் மு.பூபதி, மாநில முதன்மைச் செயலாளர் கண்ணன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில் வாண்டையார், திருப்பூர் கொடிகாத்த குமரன் பேரனாகிய திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் பிரபு கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



