நாகர்கோவில், நவம்பர் 25 –
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் வி. ஏ.ஓ.க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் அகஸ்தீஸ்வரம் தாலுகா கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
அப்போது வாக்குச்சாவடி நிலை கண்காணிப்பாளரும் புத்தேரி விஏஓ வுமான நாகேஸ்வர காந்தை உயரதிகாரி அவமதிப்பு செய்ததாகவும், சக ஊழியர்களை அவமதிப்பு செய்வதாகவும் விஏஓக்கள் சுமார் 75க்கும் மேற்பட்டோர் இன்று காலை முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து இன்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து விஏஓக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் விஏஓ சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விஏஓக்கள் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.



