திருச்சி, மே 26 –
துறையூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முசிறி சப் கலெக்டர் சுஸ்ரி சுவாங்கி குந்தியா கலந்து கொண்டு, பள்ளி வாகனங்களில் அவசர வழி பாதையில் இடையூறாக உள்ள இருக்கைகளை அகற்றவும், மருத்துவ உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வில் ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் பாபு மற்றும் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.



