திருவண்ணாமலை நவ. 24 –
திருவண்ணாமலை மணலூர்பேட்டை கோரிமேடு தெரு சந்திப்பில் திருவண்ணாமலை மாநகர தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.நாசர் உசேன் தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் ஏ.ஆர். சான்முகமத், ம.ம.க. பொருளாளர் எம்.சி.சாகுல்ஹமீது பாஜில் மண்பஈ மழாஹிரி கிராஅத் முஹம்மத் சுலைமான் ஆகியோர் முன்னிலை வகிக்க ம.ம.க. மாவட்ட செயலாளர் எம்.கலிமுல்லா அனைவரையும் வரவேற்றார்.
இதில் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது மாவட்ட பொருப்பாளர் அச்சரப்பாக்கம் ஷாஜகான் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கலீல் ரஹ்மான் மாநில துணை செயலாளர் திருப்பத்தூர் சனாவுல்லா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவரும் ம.ம.க. மாநில பொதுச் செயலாளருமான ப.அப்துல் சமது எம்எல்ஏ தமுமுக சார்பில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கே.முஜிப்பாஷா, ம.ம.க. நகர செயலாளர் ஏ.ஆர்.ஜாகீர்உசேன், நகர பொருளாளர் எஸ்.சாதிக்பாஷா, நகர துணை தலைவர் கே.லத்தீப், நகர மருத்துவரணி செயலாளர் கே.அஜ்ஜி முஹம்மது ஆகியோரிடம் ஆம்புலன்ஸ் சாவியை வழங்கி அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.
இதில் தமுமுக, ம.ம.க. மாநில மாவட்ட நிர்வாகிகள் மாநகர துணை அணி நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் நகர தலைவர் கே.அன்சர் நன்றி கூறினார்.



