தஞ்சாவூர், மார்ச் 11 –
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மொழிபெயர்ப்பு துறையின் இணைபேராசிரியரும் துறை தலைவருமான ரா.சு.முருகன் தமிழ் ஆங்கில இலக்கண மொழிபெயர்ப்பு என்னும் நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் தமிழில் வினைச்சொற்கள், பயனிலைகள் மொழி பெயர்த்தல், செயல்பாட்டு வினைகளை மொழிபெயர்த்தல், வருணனை வாக்கியங்களில் மொழிபெயர்ப்பு, நீண்ட தொடர்களை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள், தொடர்களை மொழிபெயர்த்தல், எடுத்துக்காட்டான மொழிபெயர்ப்புக்கள் சில மற்றும் மொழிபெயர்ப்பாளர் அடையும் சிக்கல்கள் ஆகிய பொருளடக்க ங்களைகொண்டுள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழா தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இந்த நூலை துணை வேந்தர் குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை தாங்கி, வெளியிட பதிவாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து, முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார் இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.



