கிருஷ்ணகிரி, மே 23 –
தமிழக முதல்வரக ஜோசப் விஜய் பதவி ஏற்றுள்ளதை கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தவெக ஒன்றிய கழகத்தின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. காவேரிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் துவங்கிய இத்த கிரிக்கெட் போட்டியில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், போத்தாபுரம், தளிஹள்ளி, நரிமேடு, பையூர், ஜெகதாப், ஹாள்வேஹாள்ளி, திம்மாபுரம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டனர்.
காவேரிப் பட்டினம் தவெக ஒன்றிய செயலாளர் விஜய் குமார், மாவட்ட மருத்துவமனை அமைப்பாளர் பார்த்திபன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினருமான எல்.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார்.
இதனையடுத்து காவேரிப்பட்டினம், ஜெகதாப், பையூர், ஹால்வே ஹள்ளி உள்ளிட்ட பல்வேறு அணிகள் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். மூன்று நாள்கள் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் கேடயத்தினை எல். சுப்பரமணியன் வழங்கி கெளரவிக்க உள்ளார்.
தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பதவி ஏற்றதை சிறப்பிக்கும் விதமாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் வந்து உறுப்பினர் முத்து, முன்னாள் நகர தலைவர் தக்காளி தவமணி, காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், கலைப் பிரிவு துணைத் தலைவர் தேவேந்திரன் மற்றும் தவெக கட்சி சேர்ந்த ஒன்றிய துணை செயலாளர் உதயகுமார், ஒன்றிய இணைச் செயலாளர் பச்சையப்பா,
நகர இளைஞர் அணி செயலாளர் அப்துல் ரஷீக், நகர செயற்குழு உறுப்பினர் அருண்குமார் கே.வி.எஸ். சாந்தகுமார், உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



