திருச்சி, மே 28 –
திருச்சி மாவட்டம் திருவரம்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் குண்டூர்-MIET சோதனை சாவடியில் திருச்சி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டும் பொழுது திடீரென்று ஏற்படும் கூடிய விபத்தில் சிக்கி மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவதால் உயிர் இருந்தும் இல்லாதது போன்ற உயிருள்ள சடலமாய் ஒரு அறையில் முடங்கி கிடப்பது, அதனால் குடும்ப உறுப்பினர்கள் பல துயரங்களுக்கு ஆளாகின்றனர் என்பதை எடுத்துரைத்து தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டிய நபர்களின் தலை கவசத்தின் தன்மை சோதனை செய்து காட்டி பாதுகாப்பதற்காக அணிய வேண்டிய தலைக்கவசத்தை காவல்துறையினருக்கு பயந்தோ அல்லது விளம்பரத்திற்காகவோ அணிய வேண்டாம் என எச்சரிக்கை செய்து காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் நவல்பட்டு காவல்துறையினர் சேர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.



